Monday 13 February 2017

உறையும் மனமே உரையாடு......



கடலில் கலந்த கோடி துளிகளில் ஒன்றானாயோ,
"காத்திருந்தால் முத்தாகலாம்" என்ற சிந்தனையில் உறைந்து விடாதே....
வருத்திக்கொள்,
காற்றாகி விடு,
உயரப்பறக்க உன்னயே துறவு
மேகத்தை முட்டு
நிச்சயம் சரிவாய்....
காற்றாக மறுமுறை துணியலாம் தவறில்லை,
முத்தாகும் எண்ணத்தில் மட்டும் மூழ்கி விடாதே......
மறுமுறை நீரின் புனிதமடைய மறுக்க படுவாய்......
உறைந்துப்போகும் சிந்தனையில் மட்டும் உருகி விடாதே.......
உணர்ந்துவிடு,
உடையமாட்டாய்
நல்லுரமாவாய் வரும் பொற்காலத்தில்........

அ.செ.ஸ்ருதி பார்கவி.

Sunday 10 April 2016

How the life is..

What we people's do all the time ⌚.. We always say someone or something is not perfect.. We humans easily trust machines but not humans. We people's always run 🏃 for something.. We people's created a set of rules called culture, discipline... Etc,.. And want to live like with in that rules... And we always fight for our rules (culture).. We always say my language is best.. My culture is best.. My caste is best.. My religion is best.. My nation is best...All this best only because of only reason you born there.. Some people's say all this things are their identity but what I say, this are human dividing factors..
To be continued...

Monday 24 August 2015

தோல்வியே வெற்றிதான்!



தோல்வியே வெற்றிதான்!

மரத்தின் தோல்வியே காகிதம்
காகிதத்தின் வெற்றியே கல்வி.

கடல்நீரின் தோல்வியே உவர்ப்பு
உவர்ப்பின் வெற்றியே உறுசுவை.

மாரியின் தோல்வியே வறுமை
வறுமையின் வெற்றியே சேமிப்பு.

பசுமையின் தோல்வியே பாலை
பாலையின் வெற்றியே எண்ணெய்க் கிணறுகள்.

காதலின் தோல்வியே பிரிதல்
பிரிதலின் வெற்றியே புரிதல்.

மனிதனின் மிகப்பெரிய தோல்வி மரணம்
மரணத்தின் மாபெரும் வெற்றி உடல் உறுப்பு தானம்.

தோல்வியின் தோல்வியே வெற்றி
வெற்றியின் வெற்றியே தோல்வியில்.

வெற்றியின் பாதையில் தோல்வியும் உண்டு
தோல்விகள் கண்டும் வெற்றியை அடைவோம்.

வேண்டும் சுதந்திரம்!



வேண்டும் சுதந்திரம்!

அன்னியச் செலாவணியை உயர்த்த
அயராது உழைக்கும் இந்தியனின் வாழ்க்கை சுதந்திரமா!

அரசியல் என்ற பெயரில்
அரசாங்கத்தையே ஏமாற்றும் இந்நிலை சுதந்திரமா!

பலகோடி இளைஞர்களின் இலட்சியக்
கனவை அடியோடு அறுக்கும் வஞ்சம் சுதந்திரமா!

விளை நிலத்தையும் விலை நிலமாக
மாற்றும் இக்கொடுஞ் செயல் சுதந்திரமா!

மூவண்ணக் கொடியேற்றி இரு இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டு
ஒற்றுமையாக வளரும் நமது நாளைய தலைமுறைக்காவது
கிடைக்கப் பெறுமா நாம் வேண்டும் சுதந்திரம்...!!!

இந்தியர்களை உயர்த்திய பின்னே
அன்னியர்களுக்கு உதவலாம்.

அரசியல் பிழைத்து மக்களை ஏமாற்றுவதை விடுத்து
அறிவியல் பாதையில் முன்னேற்றத்தைக் காண்போம்.

கல்வியை வியாபாரமாக்குவதை விடுத்து
வியாபாரத்தில் கல்வியைப் பயன்படுத்துவோம்.

பல மாடிகளைக் கட்டிப் பணம் பறிப்பதை விடுத்து
வரப்பு வெட்டி விவசாயம் புரிவோம்.

இலாபத்தை எதிர்பார்த்து இலட்சியம் அமைக்காமல்
லஞ்சத்தை ஒழிக்க ஒரு இலட்சியம் எடுப்போம்.

பணம் போன போக்கிலே மனத்தைப் போகவிடாமல்
மாற்றம் புரியும் குணத்தால் நம் மனத்தை மாற்றுவோம்!

சுதந்திரத்தை அடைய சுயநலத்தை விடுவோம்...!

Sunday 21 June 2015

யோகம் - ஒரு முன்னுரை...



இன்று சர்வதேச யோகா தினம்.....
யோகம் - ஒரு முன்னுரை...

முக்தியைப் பெற ஆகமங்கள் கூறும் நான்கு வழிகளான சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் இவற்றில் 'சாரூப்ய' முக்தியை அருள்வது யோகம்.

யோகம் என்றால் ஓகம் --> ஓத்தல்  --> இணைத்தல் என்று பொருள்.
(நல்ல தமிழ்ச்சொல்லை கெட்ட வார்த்தையாக்கி விட்டனர். என்ன செய்வேன்!)
மனிதனை இறைவனோடு இணைத்தல் இக்கலையின் நோக்கம்.

ஆதி சிவன் கொடுத்து உமா தேவி, நந்தி, சப்த ரிஷிகள், சனகாதி முனிவர்கள், நவதாத சித்தர், பதினெட்டு சித்தர்கள் என இக்கலை பயணித்த பாதை பெரிது.
தென்னாடுடையவர் சிவன் மட்டுமல்ல சித்தர்களுமே.
18 சித்தர்கள் தொடங்கி பல்லாயிரம் சித்தர்கள் தோன்றி இம்மண்ணில் யோகமும் மருத்துவமும் கலைகளும் வளர்த்தனர்.
யோக சூத்திரம் அருளிய பதஞ்சலியும், ஆயுள்வேதம் அருளிய தன்வந்த்ரியும்,
பல்வேறு தளவாடங்கள் நிறைந்த தற்காப்பு மற்றும் போர்க் கலையான பரசுராமனின் வடக்கன் களரியும் சிறந்தது தென்னாட்டில்.
வெறும் கையாலும், வர்ம முறைகளாலும் தற்காக்கவும் போரிடவும் மருத்துவம் செய்யவும் உதவும் தெக்கன் களரியும் தமிழொடு சேர்த்து அகத்தியன் வளர்த்ததும் தென்னாட்டில்.
அகத்தியர், போகர், திருமூலர், பதஞ்சலி, தன்வந்த்திரி, விஸ்வாமித்திரர், வஷிஸ்டர்....என மிகப் பெரும் ரிஷிகள், யோகிகள், சித்தர்கள் வாழ்ந்தும் ஜீவ சமாதி அடைந்ததும் தமிழ்கூறும் தென்னாட்டில்.

மூலாதாரம் தொடங்கிய ஆறாதாரம் தொட்டு ஏழாவதான சஹஸ்ரத்தில் பரமசிவத்தை உணர்வதே யோகியின் இலட்சியம். ராஜ யோகம், அட்டாங்க யோகம், ஹட யோகம், குண்டலினி யோகம் என்று எத்தனை முறைகள் எத்தனை பெயர்கள்.
நம் அன்றாட வாழ்க்கையில் எத்தனை ஆசனங்கள், முத்திரைகள்!
உண்ட நிலை, அமர்ந்த நிலை, படுத்த நிலை, உறங்கும் நிலை, நீட்டிய நிலை, குறுக்கிய நிலை.....
காலைக் கடன் கழிக்கும் நிலை கூட ஒரு முக்கிய ஆசனம். ஐயப்பன் அமர்ந்திருக்கும் ஆசனம் அது!
குண்டலினி மேல் எழ உதவும் சிறப்பான ஆசனம் அது(மலாசனம்).

சூரிய வணக்கம் (Surya Namaskaaram)


மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விஷுத்தி, ஆஞ்ஞை, சகஸ்ரம் என்ற ஏழ் ஆதாரங்கள். அவற்றை இயக்கும் ஓம்-ந-ம-சி-வ-ய எனும் பிரணவத்தோடு கூடிய ஐந்து ஒலிகள்.
இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்னும் யோகத்தின் எட்டு நிலைகள்.
இடகலை, பிங்கலை, சுழுமுனை....என்று நாடிகள் எழுபத்தி இரண்டாயிரம்.
பிராணன், அபானன், உதானன், வியானன், சமானான்....என்று வாயுக்கள் பத்து.
தொடு வர்மம், படு வர்மம், தட்டு வர்மம், நோக்கு வர்மம் என வர்மம் பிரயோகம் செய்ய வர்மப் புள்ளிகள் நூற்றெட்டு!
நடராஜனின் ஆடல் கலையும் அதில் வரும் நூற்றெட்டு நிலைகளும் யோக முறைகளே.
காம சாத்திரத்திலும் யோகம் உண்டு.
அப்பப்பா!!! மலைக்க வைக்கிறது நம் யோக முறைகள்.

சர்வதேச யோகா தினமான இன்று இறைவனையும், பெரியவர்களையும், முன்னோர்களையும் நினைத்து வணங்கி... நம் பெருமைகளையும் பண்பாட்டையும் கலைகளையும் வளர்க்க உறுதி பூண்டு செயல்படுவோம்.

குறிப்பு:
தொலைக்காட்சியைப் பார்த்து செய்வது, நூல்களைப் படித்து செய்வது என்ற ஏகலைவன் வழிகளை விட ஒரு உண்மையான நுட்பம் அறிந்த குருவைத்தேடி அறிந்து யோகத்தை நேரில் கற்றுக்கொள்ளுங்கள்.
நூல்கள் வழிகாட்டி தான் குருவல்ல.
மூச்சுப்பயிற்சி இல்லாமல் எசக்கு பிசக்காக உடலைத் திருகினால் ஆறாதார நிலை கெட்டுவிடும்.
நல்லதைக் கொடுக்கும் யோகம் கெட்டதையும் கொடுக்கும்.
தேவநிலைக்கு அழைத்துச் செல்ல வேண்டியது அசுர நிலைக்கும் கொண்டு செல்லும்.
கவனத்தோடு கற்று நுட்பங்களை அறிந்து செய்யுங்கள்.
இது உடற்பயிற்சியல்ல மனிதனின் ஒப்பற்ற ஆற்றல்களோடு தொடர்புடைய கலை.

Creative Commons License
யோகம் - ஒரு முன்னுரை.... by Dhanesh Rathinasamy is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.